தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் - தமிழக அரசு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் - தமிழக அரசு
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் -  தமிழக அரசு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 11 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ பதினாறவது சட்டமன்ற பேரவையில் முதல் கூட்டத்தொடர் 2021- ஆம் ஆண்டு மே திங்கள் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்வர். நிகழ்ச்சிக்கு வரும் உறுப்பினர்கள் தேர்தல் வெற்றி சான்றிதழை எடுத்து வரவேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பேரவைத்தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் மே 12 ஆம் தேதி நடைபெறும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சரவையில் 15 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com