இன்று இரு முறை கூடும் தமிழக சட்டப்பேரவை

இன்று இரு முறை கூடும் தமிழக சட்டப்பேரவை

இன்று இரு முறை கூடும் தமிழக சட்டப்பேரவை
Published on
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை, மாலை என இரு வேளையும் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில், துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. வருகிற 13-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில், அவை நடவடிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று காலை பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அவை மீண்டும் கூடி, சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
நாளை காவல்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்குப் பின்பு 13-ஆம் தேதியும் விவாதம் தொடரும் என்றும் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுவார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 13 ஆம் தேதியுடன் அவை முடிவடையும் நிலையில், அன்றைய தினம், கேள்வி நேரம் கிடையாது எனவும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com