கஸ்தூரி
கஸ்தூரிபுதியதலைமுறை

அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - கைது செய்ய போலீசார் தீவிரம்

நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Published on

நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.. தெலுக்கு மக்கள் குறித்து அவதூராக பேசிய நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மூன்றாம் தேதி சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுக்கு மக்கள் குறித்து அவதூராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மதுரை திருநகரில் நாயுடு மகா ஜன சங்கம் அளிக்கப்பட்ட புகாரில் முன் ஜாமீன் கோரி கஸ்தூரி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை கைது செய்ய மதுரை மாநகர காவல்துறையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் உதவி காவல் ஆணையர் குருசாமி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் துரைப்பாண்டி, மதுரை வீரன் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com