இனிவரும் காலங்களில் காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதன்படி, 3 ஷிப்ட்டுகளில் காவல் துறையினர் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட காவல் துறையினருக்கான ஆணையத்தை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.