ஆவின் ஊழியர்கள் பணி நீக்கம் - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

ஆவின் ஊழியர்கள் பணி நீக்கம் - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
ஆவின் ஊழியர்கள் பணி நீக்கம் - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்புப்பிரிவு, பால் வள துணைப் பதிவாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில் எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்தது தவறு எனக் கூறி, வழக்கு தொடர்ந்திருந்த 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com