கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம்

கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம்

கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம்
Published on
தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்த புகாரில் கைதான கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
 
திமுக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பெண்கள் உள்ளிட்டோர் குறித்து இழிவான கருத்துகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்ததாக  கிஷோர் கே.சாமி என்பவர் மீது புகார்கள் எழுந்தன. 
 
இது தொடர்பாக சங்கர்நகர் போலீசார் கிஷோர் கே.சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெண் பத்திரிகையாளர் பற்றி ஆபாச கருத்துகளை வெளியிட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கிஷோர் கே.சாமியை 2-வது முறையாக கைது செய்தனர். மேலும், நடிகை ரோகிணி உள்பட மேலும் 3 பேர் கிஷோர் கே.சாமி மீது புகார்கள் கொடுத்தனர். 
 
இந்த நிலையில் கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை காவல் அனையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் குண்டாஸ் போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com