'ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றலாம்' : அறிக்கை தாக்கல்

'ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றலாம்' : அறிக்கை தாக்கல்
'ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றலாம்' : அறிக்கை தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றலாம் என கருத்துக் கேட்புக்குழு சென்னை ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற கடந்தாண்டு தமிழக அரசு ஆணையிட்டது.இதற்கு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்ட திட்ட இயக்குநர் ஈனாக் தலைமையிலான குழு சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் இன்று அறிக்கை தாக்கல் செய்தது. 

அதில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதால் மற்ற வீடுகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த பாதிப்பும் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்ற கடந்தாண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தேனாம்பேட்டையில் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் போயஸ்கார்டன் பகுதியில் இடையூறு இல்லாத அளவுக்கு நினைவு இல்லம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தாகவும் தெரிகிறது. இந்தச் சூழலில் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் என்று கருத்துக்கேட்புக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com