இந்நிலையில் இந்த நோயின் தீவிரம் தெரியாமல் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பலரும் வெளியில் மிகச் சாதாரணமாக நடமாடிக் கொண்டுள்ளனர். காவல்துறையினரும் அதனைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நாடகம் போட்டு விளக்குவது, பாடல்கள் பாடி விளக்குவது, காணொளி காட்சிகள் மூலம் விளக்குவது, பல்வேறு நூதனமான தண்டனைகள் மூலம் விளக்குவது எனப் போராடி வருகின்றனர். சில இடங்களில் காவல்துறை பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்து வருகிறது. அதனை எதிர்த்து சில சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.