வெளியானது குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் - எத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி?

வெளியானது குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் - எத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி?
வெளியானது குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் - எத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி?
தமிழகத்தில் சுமார் பத்து லட்சம் பேர் எழுதிய குரூப் 2 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியாகி உள்ளது. 
கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வவை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து,  9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
குரூப்-2 நேர்முகத் தேர்வு பதவிகளான 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 2 நன்னடத்தை அலுவலர்கள், 19 உதவி ஆய்வாளர்கள், 17 சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 8 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஒரு சிறப்பு உதவியாளர், 58 தனிப்பிரிவு உதவியாளர்கள் என மொத்தம் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் வரும் 9 நகராட்சி பணியாளர் ஆணையர் நிலை-2 பணியிடங்கள், 291 முதுநிலை ஆய்வாளர்கள், 972 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்பட 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 5 ஆயிரத்து 529 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21-ம்தேதி நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள்.  இந்த தேர்வு முடிவு கடந்த ஜூன் மாதமே வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து கால தாமதம் ஆகி வந்தன. கடந்த மாதத்தில்(அக்டோபர்) தேர்வு முடிவு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
அதற்கிடையில், சமூக வலைதளங்களில் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் தொடர்பான சில தகவல்களும் வெளியாகின. அதனைத் தொடர்ந்து மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முறையை பின்பற்ற மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த பணி நிறைவுற்ற பின்னர் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. இந்த நிலையில் இதற்கான தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவு வெளியிட்டது.
அந்த வகையில் முதல்நிலை தேர்வு எழுதிய 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேரில், 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com