குளத்தில் குளித்தபோது சகதியில் சிக்கிய சிறுமி.. காப்பாற்றச் சென்ற பெண்ணும் பலியான சோகம்

குளத்தில் குளித்தபோது சகதியில் சிக்கிய சிறுமி.. காப்பாற்றச் சென்ற பெண்ணும் பலியான சோகம்
குளத்தில் குளித்தபோது சகதியில் சிக்கிய சிறுமி.. காப்பாற்றச் சென்ற பெண்ணும் பலியான சோகம்

ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் மூழ்கி இரு இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளைநயினார் புரத்தைச் சேர்ந்தவர்கள் தேவராஜ் -சண்முகத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சண்முகத்தாய் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரின் 16 ஆம் நாள் காரிய நிகழ்ச்சி நேற்று நயினார்புரத்தில் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் இன்று சிவகளை பெரிய குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அவர்களுடன் மூத்த மகள் சுடலை கனி மற்றும் உறவினர்கள், பெண்கள் என ஏராளமானோர் சென்றுள்ளனர். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த ஆறுமுகநேரியைச் சேர்ந்த கோகிலா என்ற 12 வயது சிறுமி திடீரென சகதியில் சிக்கியுள்ளார்.

இதையடுத்து சிறுமியை காப்பாற்றுவதற்காக சுடலை கனி உள்ளே இறங்கியுள்ளார். அப்போது இருவரும் சகதியில் சிக்கியுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்கள் நீரில் மூழ்கினர். இதற்கிடையில் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதற்குள் சுடலை கனியை மட்டும் அங்கிருந்தவர்கள் சுயநினைவின்றி மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே சுடலை கனி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கோகிலாவை சடலமாக மீட்டனர்.

இதையடுத்து இருவரது உடலும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இருவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com