காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு
Published on

மதுரை அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த மணிப்பாண்டி, பேச்சியம்மாள் தம்பதியின் மகள் சித்ரா தேவி (14). இவர் திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த  பாலமுருகன் (23), ஒருதலையாகக் காதலித்துள்ளார். தன்னைக் காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்வோம் என்றும் அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.

இதைப் பெற்றோரிடம் சித்ராதேவி தெரிவித்தார். இதையடுத்து டிசம்பர் மாதம் மாணவியின் தந்தை மணிபாண்டி திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாலமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று இறுதியாகக் கேட்டுள்ளார். அப்போதும் மாணவி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கடந்த 16ஆம் தேதி மாலை மாணவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார். 

இதைக்கண்டு அக்கபக்கத்தில் இருந்தவர்கள் தீயை அனைத்துள்ளனர். பின்னர் மாணவியை திருமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்தனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்ராதேவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com