நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு 3, 4-வது அணு உலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் 3வது, 4வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தாமல் வெளிமாநில ஒப்பந்தத் தொழிலாளர்களைக்கொண்டு பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.