இறப்பிலும் இணைபிரியாத காதல்: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோகம்!

இறப்பிலும் இணைபிரியாத காதல்: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோகம்!
இறப்பிலும் இணைபிரியாத காதல்: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோகம்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த செய்தி அறிந்த சிறிது நேரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பாலக்கரை இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (91). இவரது மனைவி சம்பூரணத்தம்மாள் (86). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரிலுள்ள மகன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள மற்றொரு மகன் வீட்டிலும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு சம்பூரணத்தம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் உள்ள வீட்டில் வைப்பதற்காக குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். சம்பூரணத்தம்மாள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் வீட்டிலிருந்த கிருஷ்ணனும் காலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, கிருஷ்ணன், சம்பூரணத்தம்மாள் உடல்கள் மண்ணச்சநல்லூரில் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனைவி இறந்த சிறிது நேரத்தில் வயதான கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com