வேகம் அதிகரித்த 'கஜா'... அதிதீவிர புயலாக வலுப்பெறும் என தகவல்!

வேகம் அதிகரித்த 'கஜா'... அதிதீவிர புயலாக வலுப்பெறும் என தகவல்!

வேகம் அதிகரித்த 'கஜா'... அதிதீவிர புயலாக வலுப்பெறும் என தகவல்!
Published on

8 கி.மீ வேகத்தில் இருந்த ’கஜா’ புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது. ’கஜா’ புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 380 கிலோ மீட்டர் தூரத்திலும் ’கஜா’ புயல் உள்ளதாகவும், இன்று மாலை அல்லது இரவு பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு நூறு கிலோ மீட்டரை தொடலாம் எனவும் கூறப்படுகிறது.

புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மாநிலம் காரைக்கால், ஆகிய‌ பகுதிகளில் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் அலை ஒரு மீட்டருக்கும் மேல் உயரக்கூடும் என்பதால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக‌ கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com