சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்த யானை: தந்தத்தை வெட்டியவர்களுக்கு வலைவீச்சு

சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்த யானை: தந்தத்தை வெட்டியவர்களுக்கு வலைவீச்சு

சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்த யானை: தந்தத்தை வெட்டியவர்களுக்கு வலைவீச்சு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்த யானையின் அருகே வெட்டி எடுக்கப்பட்ட தந்தம் கண்டறியப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, கரட்டூர் சடையம்பாறையில் யானை இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து கால்நடை மருத்துவக் குழுவுடன் வனத்துறை அதிகாரிகள் சென்றனர். பிரேத பரிசோதனை ஆய்வில் யானை இறந்த பிறகு தந்தம் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில், அதே பகுதியில் பாறை இடுக்கில் சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்தத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர். யானையின் தந்தத்தை வெட்டிய குற்றவாளிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com