தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் 75 மையங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு குறைந்தபட்சம் 14 மேஜைகள் போடப்பட உள்ளன. கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியுடன் மேஜைகள் போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வந்த வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகட்டிவ்’ சான்றை சமர்ப்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

சிறிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவு பிற்பகல் 3 மணியளவிலும் பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படுவதால், வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்து, முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com