கரையை கடந்தது மாண்டஸ் புயலின் மையப்பகுதி

கரையை கடந்தது மாண்டஸ் புயலின் மையப்பகுதி
கரையை கடந்தது மாண்டஸ் புயலின் மையப்பகுதி

மாண்டஸ் புயலின் மையப்பகுதி பெரும் தாக்கத்துடன் மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயலின் முன்பகுதி, மையப்பகுதி கரையை கடந்த நிலையில் பின்பகுதி ஒரு மணி நேரத்தில் கரையை முழுமையாக கடக்கும் எனவும், சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் புயல் நகர்கிறது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசி வருகிறது.

தவற விடாதீர்: காலநிலை மாற்ற பாதிப்புகளை குறைக்க புதிய இயக்கம் - தமிழக அரசு புது முயற்சி




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com