தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர்!

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர்!

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர்!
Published on

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு பின் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய தொழிற் கொள்கை வகுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். புதிய தொழிற்கொள்கை தற்போது தயாராகி விட்ட நிலையில் அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிடுகிறார்.

சிறு குறுந் தொழிற் நிறுவனங்களுக்கான தொழிற் கொள்கையும் இன்று வெளியிடப்படுகிறது. சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில்முதல்வர் முன்னிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் 20 தொழிற்நிறுவனங்களின் உற்பத்தியையும் முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கிவைக்கிறார். மணப்பாறை, ஓரகடம், கும்மிடிப்பூண்டி, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கவும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com