பயிர்க்காப்பீடு கோரி வழக்கு... மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கிரிதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், 2015-16 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை சுமார் 450 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்படாததால் 6 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரீமியம் செலுத்தப்பட்ட பின்னரும் அரசு அளித்த புள்ளி விவரங்கள் முரண்பாடாக இருப்பதாக கூறி இழப்பீட்டுத்தொகை தருவதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்து வருவதாக மனுதாரர் கூறியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள், தேசிய வேளாண் காப்பீட்டு கழகம் ஆகியவை 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு ஜூன் 29ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.