மருத்துவமனை வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரின் காலில் ஏறிய மருத்துவரின் கார்

மருத்துவமனை வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரின் காலில் ஏறிய மருத்துவரின் கார்
மருத்துவமனை வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரின் காலில் ஏறிய மருத்துவரின் கார்

(கோப்பு புகைப்படம்)

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவரின் காலில் மருத்துவரின் கார் ஏறியதால் பரபரப்பு நிலவியது.

தாம்பரத்தை அடுத்த படப்பை மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். ஸ்விகியில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி வித்யா. பிரசவத்திற்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 6-ம்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

இதனிடையே வினோத்குமார் மருத்துவமனை வளாகத்திலேயே படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வினோத்குமார் படுத்து தூங்கிக்கொண்டிருந்த போது குழந்தைகள் நல மருத்துவர் தமிழரசன் தன்னுடைய காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் பின் டயர் வினோத் குமாரின் காலில் ஏறியது.

இதனால் வினோத் குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை மருத்துவர் தமிழரசன் தனது காரிலேயே அழைத்து சென்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வினோத் குமாரின் வீட்டிற்கு அழைத்துச்சென்று சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் எந்த புகாரையும் அவர் கொடுக்கவில்லை. புகார் அளிக்கவில்லை என்று வினோத்குமார் எழுதி கொடுத்து விட்டு சென்றதாக எழும்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com