போலீசை மிரட்ட கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் மாயம்

போலீசை மிரட்ட கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் மாயம்
போலீசை மிரட்ட கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் மாயம்

அடையாறு கூவம் ஆற்றில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் குதித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை அருகே அடையாறு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி மது அருந்தியுள்ளாரா என சோதனை செய்ததாக தெரிகிறது. மது அருந்தியிருந்தது தெரிந்ததால், காவல்துறையினர் அவரது இரு சக்கரவாகனத்தில் சாவியை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வண்டியின் சாவியை தராவிட்டால் கூவத்தில் குதித்து விடுவதாக இளைஞர் மிரட்டல் விடுத்த நிலையில், காவல்துறையினர் அதனை பொருட்படுத்தாததால் மது போதையில் இருந்த ராதாகிருஷ்ணன் அடையாறு கூவம் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் ராதாகிருஷ்ணன் கரை சேராததால், தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய  தேடியும் ராதாகிருஷ்ணன் கிடைக்காததால், அவரது உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com