கேரளாவில் பிடெக் பட்டம் பெற்ற உன்னிகிருஷ்ணன், ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் அசோசியேட்டாக இருந்துள்ளதாக தெரிகிறது. சிறிய தண்ணீர் கேனில் பெட்ரோலை எடுத்துச் சென்ற உன்னி கிருஷ்ணன், தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவருடன் தங்கியிருந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.