தேசிய நெடுஞ்சாலையில் உருண்டோடிய ஆட்டோ: சிதறி விழுந்த பயணிகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தேசிய நெடுஞ்சாலையில் உருண்டோடிய ஆட்டோ: சிதறி விழுந்த பயணிகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தேசிய நெடுஞ்சாலையில் உருண்டோடிய ஆட்டோ: சிதறி விழுந்த பயணிகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
Published on

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ திடீரென சாலையில்  கவிழ்ந்து உருண்டோடியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாதூர் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக ஆட்டோவில் சென்றுவிட்டு வீடு திரும்பினர். இந்த ஆட்டோவை அப்பு என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகே வந்த ஆட்டோ திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து உருண்டோடியது.

அப்போது அதே திசையில் வந்த இருசக்கர வாகனம் அந்த ஆட்டோ மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டும் ஆட்டோவில் வந்தவர்கள் சாலையில் சிதறி கீழே விழுந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு அவ்வழியாக வந்த ஆட்டோ மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com