இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மரபுசாரா எரிசக்தி துறையில் திறன்படைத்த நிறுவனங்கள் கையாள்கிற உத்தியை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும். மேலும், சந்தை ஆய்வு, ஒப்பந்தபுள்ளிகள் மேலாண்மை மற்றும் அமலாக்கம் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கும். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.