சரக்கு லாரியில் சிக்கிய கன்று குட்டி - மீட்க போராடிய தாய்ப் பசுவின் பாசப் போராட்டம்!

சரக்கு லாரியில் சிக்கிய கன்று குட்டி - மீட்க போராடிய தாய்ப் பசுவின் பாசப் போராட்டம்!
சரக்கு லாரியில் சிக்கிய கன்று குட்டி - மீட்க போராடிய தாய்ப் பசுவின் பாசப் போராட்டம்!

புதுக்கோட்டையில் சரக்கு லாரியின் அடியில் சிக்கிய கன்று குட்டியை மீட்க போராடிய தாய்ப் பசுவின் பாசப்போராட்டத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்த மக்கள் லாரியின் அடியிலிருந்து கன்றுக்குட்டியை மீட்டனர்.

புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட கீழ 2 ம் வீதியில் உள்ள கடைகளுக்கு சரக்குகளை இறக்குவதற்காக லாரி ஒன்று நின்றுள்ளது. அப்போது அவ்வழியாக தாய் பசுவுடன் வந்த கன்றுக்குட்டி ஒன்று திடீரென்று லாரிக்கு அடியில் சென்று சிக்கி கொண்டது. பின்னர் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுகுட்டியை மீட்க தாய்பசு செய்வதறியாமல் தவித்து நின்று பாசத்துடன் போராடியது.

பின்னர் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த லாரியின் லோடுமேன்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கன்றுக்குட்டியை காப்பாற்றுவதற்காக கன்றுக் குட்டியின் காலை பிடித்து இழுத்தபோது தாய்ப்பசு அவர்களை கன்றுக் குட்டியின்‌ கிட்ட நெருங்க விடாமல் முட்டி விரட்டியது.

பின்னர்‌ பொதுமக்கள் கம்புகளை எடுத்து தாய்மாட்டை விரட்டிவிட்டு லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கன்று குட்டியை மீட்டனர். லாரிக்கு அடியிலிருந்து வெளியே வந்த கன்றுகுட்டியை பார்த்து தாய் மாடு பாசத்துடன் அரவணைத்து தன்னுடன் அழைத்துச் சென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com