தெற்கு வங்கக்கடலில் உருவான 'Amphan' புயல் அதி உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளது.
சென்னைக்கு கிழக்கே ஏறக்குறைய 650 கிமீ தொலைவில் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச உயர் தீவிர புயலாக 'Amphan' புயல் மாறியுள்ளது. இது தற்போது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மிக பலமான சூறாவளி காற்று மணிக்கு 170 இருந்து 180 கிமீ வேகத்தில் வீசக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.