சசிகலா வழக்குக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை: தம்பிதுரை

சசிகலா வழக்குக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை: தம்பிதுரை
சசிகலா வழக்குக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை: தம்பிதுரை

சசிகலா, தினகரன் தனிப்பட்ட வழக்குகளுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த தம்பிதுரை கூறியுள்ளார்.

டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த தம்பிதுரை, ‘ஓ.பன்னீர்செல்வத்தின் தேவைகள் குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும். சசிகலா, தினகரனின் தனிப்பட்ட வழக்குகளுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை. ஜெயலலிதா அரசை காப்பது கடமை. அதிமுகவில் குடும்ப அரசியல் கிடையாது.

மக்கள் வாக்களித்த இரட்டை இலை சின்னத்தை மீட்க முயற்சித்து வருகிறோம். கட்சித் தொண்டன் என்ற முறையில் ஆட்சியையும், கட்சியையும் காக்கும் முயற்சிதான் இந்த இணைப்பு நடவடிக்கை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com