நீட் விவகாரம்: இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்குடன் தம்பிதுரை, விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை

நீட் விவகாரம்: இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்குடன் தம்பிதுரை, விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை
நீட் விவகாரம்: இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்குடன் தம்பிதுரை, விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை‌ நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீ‌ண்டும் சந்தித்தனர். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக, இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே, பல‌முறை பிரதமர் அலுவல‌த்திற்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை தமிழக அமைச்சர்கள் சந்தித்துள்ள நிலையில், மீண்டும் இன்று இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com