பாதுகாப்பு படை வீரர் எடுத்த விபரீத முடிவால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

பாதுகாப்பு படை வீரர் எடுத்த விபரீத முடிவால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
பாதுகாப்பு படை வீரர் எடுத்த விபரீத முடிவால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணியில் இருப்பவர் யஸ்பால் (26). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், யஸ்பால் கடந்த சில காலமாக சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பணிக்கு வந்தவர், சென்னை சர்வதேச விமானநிலைய புறப்பாடு பகுதியில் பணியிலிருந்தார். அப்போது விமானநிலைய கழிப்பறைக்குள் சென்ற அவர், திடீரென தனது துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.

இதையடுத்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு விமானநிலைய தூய்மை பணியாளர் ஒருவர் ஓடிச்சென்று பார்த்தபோது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். உடனடியாக விமானநிலைய அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விமானநிலைய போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமான நிலைய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com