சென்னைக்கு ரயிலில் வந்த பார்சல்- 10 கையெறி குண்டுகள் மீட்பு

சென்னைக்கு ரயிலில் வந்த பார்சல்- 10 கையெறி குண்டுகள் மீட்பு

சென்னைக்கு ரயிலில் வந்த பார்சல்- 10 கையெறி குண்டுகள் மீட்பு
Published on

ராணுவத்திற்கு பயன்படுத்தப்படக்கூடிய 10 கையெறி குண்டுகள் சென்னையில் மீட்கப்பட்டிருக்கிறது. 

நாக்பூரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பார்சல் ஒன்று ராணுவம் மூலம் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த பார்சல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அக்டோபர் மாதம் வரை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அந்த பார்சலுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகம், அந்த பார்சலை ரயில்வே குடோனுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், அந்த பார்சலை ஏலம் விட முடிவு செய்தனர். 

இதையடுத்து ராணுவத்தில் இருந்து வந்த பார்சல் என்பதால் அதில் என்ன இருக்கிறது என்பதை ரயில்வே நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் பிரித்து பார்த்தனர். அப்போது ராணுவத்தில் பயிற்சி பெறுவோர் பயன்படுத்தப்படும் 10 கையெறி குண்டுகள் இருந்தது தெரியவந்தது. பின்னர், அதில் இருந்த 10 கையெறி குண்டுகளையும் பத்திரமாக மீட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com