பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவை விசாரிக்கும் தெலங்கானா போலீஸ்

பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவை விசாரிக்கும் தெலங்கானா போலீஸ்
பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவை விசாரிக்கும் தெலங்கானா போலீஸ்

சென்னையிலுள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவை விசாரிக்க தெலங்கான போலீஸ் சென்றுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவருக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்தானது. அவர்களது மகள் ஜோவிதா, தந்தையான ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வனிதா தனது மகள் ஜோவிதாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் ஆனந்தராஜ் கொடுத்த குழந்தை கடத்தல் புகாரில், இன்று சென்னையிலுள்ள பிக்பாஸ் வீட்டில் வனிதாவை விசாரிப்பதற்கு தெலங்கானா போலீஸ் சென்றுள்ளது. இந்த விசாரணைக்கு தெலங்கானா போலீசார் சென்னை நசரத்பேட்டை போலீசாரின் உதவியுடன் விசாரணைக்கு சென்றுள்ளனர். இந்த விசாரணை இன்று காலை 10 மணி முதல் இரண்டு மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் குழந்தை யாரிடம் இருக்கிறது. யாரின் அரவணைப்பில் இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. விசாரணையில் முடிவில்தான் அவர் கைது செய்யப்படுவாரா என்று தெரியவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com