பிக்பாஸ் வீட்டில் வனிதா: கடத்தல் புகாரில் கைது செய்ய தீவிரம் காட்டும் தெலங்கானா போலீஸ்!

பிக்பாஸ் வீட்டில் வனிதா: கடத்தல் புகாரில் கைது செய்ய தீவிரம் காட்டும் தெலங்கானா போலீஸ்!

பிக்பாஸ் வீட்டில் வனிதா: கடத்தல் புகாரில் கைது செய்ய தீவிரம் காட்டும் தெலங்கானா போலீஸ்!
Published on

ஆள் கடத்தல் வழக்கில் நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதாவை கைது செய்ய தெலங்கானா போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். கைது செய்வதற்காக சென்னை போலீசாரின் உதவியையும் நாடியுள்ளனர்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவருக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்தானது. அவர்களது மகள் ஜோவிதா, தந்தையான ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். 

இந்நிலையில் மகள் ஜோவிதாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் வனிதா தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்துகொண்டுள்ளார். இதனால் அவரை கைது செய்ய உதவுமாறு நசரத்பேட்டை போலீசாரிடம்தெலங்கானா போலீசார் உதவியை கோரியுள்ளனர். இதனையடுத்து வனிதா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com