விஏஓக்கள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

விஏஓக்கள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

விஏஓக்கள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Published on

மதுரை உட்பட 13 மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்களை பணி விதிகளின் படி அவர்கள் பணிபுரியும் இடங்களிலேயே தங்கியிருக்க உத்தரவிடக்கோரி தஞ்சாவூர் திருவிடைமருதூரைச் சேர்ந்த செல்வகுருநாதன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் தங்கியிருக்க வேண்டும். இதை மீறும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது அளிக்கப்படும் புகாரை விசாரிக்க மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாக அதிகாரி ஒருவர் தலைமையில் இரு வட்டாட்சியர்கள் அடங்கிய குழுவை மாவட்ட ஆட்சியர்கள் அமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், “மதுரை, நாகப்பட்டினம், ஈரோடு, சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் விரைவில் குழு அமைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மற்ற மாவட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைத்து, அது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com