திண்டுக்கல்: மாணவிகளை கொண்டு பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அவலம்

திண்டுக்கல்: மாணவிகளை கொண்டு பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அவலம்
திண்டுக்கல்: மாணவிகளை கொண்டு பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அவலம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசுப் பள்ளி கழிப்பறையை மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைத்ததாக கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
செங்கட்டாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகுமாரி, மாணவிகளை கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறி பெற்றோர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com