பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர் அடித்துக் கொலை: மிளகாய் பொடி தூவி நகை, பணம் கொள்ளை

பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர் அடித்துக் கொலை: மிளகாய் பொடி தூவி நகை, பணம் கொள்ளை
பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர் அடித்துக் கொலை: மிளகாய் பொடி தூவி நகை, பணம் கொள்ளை

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடியை தூவி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர பாண்டியன். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மனைவியான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதிமணியுடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஸ் சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல் இன்று பிற்பகலில் அவரது உறவினர்கள் சங்கரபாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஜோதிமணி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார், சங்கரபாண்டியன் மற்றும் ஜோதிமணி ஆகிய இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடியும் தூவப்பட்டு இருந்தது. இதனையடுத்து விருதுநகரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இதையடுத்து தம்பதியரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com