உபர், ஓலா-விற்கு எதிராக டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்: 180 பேர் கைது

உபர், ஓலா-விற்கு எதிராக டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்: 180 பேர் கைது

உபர், ஓலா-விற்கு எதிராக டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்: 180 பேர் கைது
Published on

சென்னை விமான நிலையத்தில் உபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களுக்கு நிரந்தர வாகன நிறுத்தமிடம் தருவதை கண்டித்து பீரிபெய்டு டாக்சி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை விமான நிலையத்திற்கு உள்ளே பீரிபெய்டு டாக்சி ஓட்டுநர்களின் நிரந்தர நிறுத்தமிடம் உள்ளது. விமானத்தில் வரும் பயணிகளின் சேவைக்காக இந்த பீரிபெய்டு டாக்சிகள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வந்துள்ள உபர் மற்றும் ஓலா நிறுவனங்கள், தங்களின் வருமானத்தை குறைத்து விட்டதாகவும், இதனால் அவர்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் டாக்சி ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் உபர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்கும் விமான நிலையத்தில் நிரந்தர நிறுத்துமிடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விமான நிலைய நுழைவு வாயிலில் இன்று டாக்சி ஓட்டுநர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 180க்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது முழக்கங்களை எழுப்பிய டாக்சி டிரைவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com