\
மின்சார வாரியம்
மின்சார வாரியம் முகநூல்

அடிக்கடி மின்தடை ஏன்? மின்சார வாரியம் விளக்கம்

“கோடை வெயிலின் தாக்கத்தால் மின் மாற்றிகள், கம்பிகளில் பழுது ஏற்படுகிறது. அதனாலேயே மின் தடை ஏற்படுகிறது” என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
Published on

சென்னையில் ஆவடி, அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை என புகார் எழுந்தது.

மின்சார வாரியம்
சென்னை: இரவு நேரத்தில் விட்டு விட்டு வரும் மின்சாரம் - மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

இந்நிலையில், “கோடை வெயிலின் தாக்கத்தால் மின் மாற்றிகள், கம்பிகளில் பழுது ஏற்படுவதாலேயே மின்தடை ஏற்படுகிறது. மின்தடை ஏற்படும் சில இடங்களில் உடனே சரிசெய்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், ‘வரும் நாட்களில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படும் இடங்களில் ஆய்வு செய்ய மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com