’’இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்’’ - தமிழ்நாடு வெதர்மேன்

’’இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்’’ - தமிழ்நாடு வெதர்மேன்

’’இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்’’ - தமிழ்நாடு வெதர்மேன்
Published on

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.

கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் மழை குறித்து ட்வீட் செய்துள்ளார், அதில், சென்னையில், சில மணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது மழைநீர் வடியும் வரை இன்னும் சில மணிநேரங்களுக்கு தண்ணீர் தேங்கி இருப்பது சகஜம்தான். சென்னை மட்டுமில்லை, எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கடினம் என குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com