ஏப்.3ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு

ஏப்.3ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
ஏப்.3ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்.3ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடையடைப்பு முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள், வணிகர்கள் நலன் கருதி எடுக்கப்பட்டது; எந்த தனிப்பட்ட லாபநோக்கத்திற்காகவும் கடையடைப்பு போராட்டம் இல்லை என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கடையடைப்பில் சென்னை ஓட்டல்கள் சங்கம் பங்கேற்கும் என அறிவித்துள்ளது. 

அதேபோல், ஏப்ரல் 3ம் தேதி கோயம்பேட்டிலும் கடையடைப்பு நடைபெறும் என காய்கறி, கனி, மலர் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக சார்பில் தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ஏப்ரல் 5-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com