தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை

தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை

தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
Published on

தமிழகத்தில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மாநிலக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகத்தில் தங்கி பணியாற்றிட உகந்த சூழ்நிலையை உருவாக்கவும், அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், 044 - 2432 1438, 044 - 2432 1408 ஆகிய எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்புகொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இதுமட்டுமல்லாமல், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகாரிகளை நியமித்து கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் எந்தவித அச்சமோ, பதற்றமோ அடையாமல் தொடர்ந்து பணியாற்றுமாறு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com