உதய் திட்டத்தில் இணைகிறது தமிழகம்.... அமைச்சர் தங்கமணி இன்று கையெழுத்திடுகிறார்

உதய் திட்டத்தில் இணைகிறது தமிழகம்.... அமைச்சர் தங்கமணி இன்று கையெழுத்திடுகிறார்
உதய் திட்டத்தில் இணைகிறது தமிழகம்.... அமைச்சர் தங்கமணி இன்று கையெழுத்திடுகிறார்

மின்சார விநியோக நிறுவனங்களின் நிலையை சீர்திருத்த வகை செய்யும் உதய் மின் திட்டத்தி‌ல் தமிழக அரசு இணையவுள்ளது.

உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா என்ற பெயரின் முதல் எழுத்துக்களின் சுருக்கமே உதய் எனப்படுகிறது. கடந்த 2015- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் பிரதான நோக்கம், நலிவுற்றுள்ள மாநில மின் வினியோக நிறுவனங்களை கைதூக்கிவிடுவதாகும்.

உதய் மின் திட்டத்தி‌ற்கான ஒப்பந்தத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி இன்று கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதய் திட்டத்தில் ஏற்கனவே பெரும்பாலான மாநிலங்கள் இணைந்துள்ள நிலையில், அதன் சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு இணையாமல் இருந்து வந்தது. எனினும், இதுதொடர்பாக மத்திய அரசுடன் கடந்த மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில், உதய் திட்டத்தில் இணைய தமிழ‌க அரசு முடிவு செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com