தமிழக அரசின் வருவாய் குறைந்தது: 3 திட்டங்களுக்கான நிதி பயன்படுத்தப்படவில்லை

தமிழக அரசின் வருவாய் குறைந்தது: 3 திட்டங்களுக்கான நிதி பயன்படுத்தப்படவில்லை
தமிழக அரசின் வருவாய் குறைந்தது: 3 திட்டங்களுக்கான நிதி பயன்படுத்தப்படவில்லை

தமிழகத்தின் வருவாய் 2015-16 ஆம் நிதியாண்டில் 5.38 சதவிகித அளவுக்கே உயர்ந்துள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதுமுந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். வருவாய் அதிகரிப்பு 2015-16 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 8 கோடியாக இருந்தது. இது அதற்கு முந்தைய 5 ஆண்டுகளை விட மிகவும் குறைவானதாக உள்ளதாக கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-16 ஆம் நிதியாண்டில், 3 திட்டங்களுக்கான நிதியும் பயன்படுத்தப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மோனோ ரயில் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கான 200 கோடி ரூபாய் மற்றும் பாரம்பரிய நகரங்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 46 கோடி ரூபாய் ஆகியன பயன்படுத்தப்படாமல் விடப்பட்டதாகவும் மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com