பாழடைந்த நிலையில் இலங்கை அரசு விடுவித்த தமிழக படகுகள்!

பாழடைந்த நிலையில் இலங்கை அரசு விடுவித்த தமிழக படகுகள்!
பாழடைந்த நிலையில் இலங்கை அரசு விடுவித்த தமிழக படகுகள்!

இலங்கை அரசு விடுவித்த 42 படகுகளில் முதற்கட்டமாக ராமேஸ்வரம் வந்துள்ள 6 படகுகளும் பாழடைந்த நிலையில் உள்ளன.

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி, அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் படகுகளையும் பறிமுதல் செய்து சென்றனர். இவ்வாறு இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 179 படகுகளையும் மீட்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசு முதற்கட்டமாக 42 படகுகளை மீட்க ஒப்புக்கொண்டது.

இதற்காக தென்கடற்கரை மண்டபம் பகுதியில் இருந்து கடந்த 27ஆம் தேதி, ஏழு படகுகளில் தமிழக மீனவர்கள் இலங்கை சென்றனர். அங்கு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை தமிழகத்துக்கு மீட்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து படகுகளும் இயக்க முடியாத நிலையில், பழுதடைந்து இருந்துள்ளது. இதனால் ஏழு படகுகளை மட்டும் கயிறு கட்டி இழுத்து வந்துள்ளனர். பாதி வழியில் வரும்பொழுது ஒரு படகுக்குள் தண்ணீர் ஏறி அது கடலில் மூழ்கியுள்ளது. எனவே மீதமுள்ள 6 படகுகளுடன் தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் வந்தடைந்தனர். மீட்கப்பட்ட படகுகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக பராம‌ரிப்பின்‌றி கிடந்ததால், அவற்றை சீரமைக்க ரூ.8 லட்சம் வரை செல‌வாகும் என மீனவர்கள் சங்கத் தலைவர் ஜேசுராஜ் தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி வழங்கி தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com