5 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

5 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

5 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
Published on

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது விசைப்படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

நெடுந்தீவு அருகே அதிகாலை 2 மணியளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி 5 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து 2 நாட்களே ஆன நிலையில், இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழக மீனவர்களின் 143 படகுகள் இலங்கை வசம் உள்ள நிலையில், நாட்டுப்படகு மீனவர்கள் 11 பேர் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com