தமிழ்நாடு
தமிழகம்: தினசரி கொரோனா பாதிப்பு 35,000-ஐ தாண்டியது - 397 பேர் உயிரிழப்பு
தமிழகம்: தினசரி கொரோனா பாதிப்பு 35,000-ஐ தாண்டியது - 397 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,579 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 25,368 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 397 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சென்னையில் மட்டும் மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 97 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 89 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,63,390 ஆக உள்ளது.