”இருமாநில நலன்கள் உறுதி செய்யப்படும்” - கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

”இருமாநில நலன்கள் உறுதி செய்யப்படும்” - கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
”இருமாநில நலன்கள் உறுதி செய்யப்படும்” - கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக 2 மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழகம் உறுதிசெய்யும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ தமிழக எல்லையோர ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையைத் திறந்து அணையின் நீர்மட்டத்தைக் குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் 2 மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழகம் உறுதிசெய்யும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com