'கேரளாவில் ஜன.14 உள்ளூர் விடுமுறை அளித்திடுக’- கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்

'கேரளாவில் ஜன.14 உள்ளூர் விடுமுறை அளித்திடுக’- கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்

'கேரளாவில் ஜன.14 உள்ளூர் விடுமுறை அளித்திடுக’- கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்
Published on

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனது கடிதத்தில் அவர், “தமிழ் பேசும் மக்கள் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு பொங்கலை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக, கேரள அரசு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என அறிகிறேன். ஆனால் இந்த வருடம், ஜன.15ம் தேதி இந்த 6 மாவட்டங்களிலும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே உலகம் முழுவதும் தமிழ்ச் சமூகங்களிடையே கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜன.14 ம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com