தெருக்கடையில் தேநீர் அருந்திய முதல்வர்: செல்ஃபி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்!

தெருக்கடையில் தேநீர் அருந்திய முதல்வர்: செல்ஃபி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்!
தெருக்கடையில் தேநீர் அருந்திய முதல்வர்:  செல்ஃபி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்!

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த போது, சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தி, பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாம்பாக்கதில் இருந்து முடிச்சூர் செல்லும் வழியில் அமைந்துள்ள சாலையோர தேனீர் கடைக்கு சென்று அங்கு அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனீர் அருந்தினார். அப்போது அங்கிருந்தவர்களிடம் மழை பாதிப்புகள் பற்றி கேட்டறிந்தார். அங்கிருந்தவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக சென்னை, தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில், சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com