‘டிவி சேனலை ஒளிபரப்ப மாட்டோம்’ காவிரிக்காக கேபிள் சங்கம் போராட்டம்

‘டிவி சேனலை ஒளிபரப்ப மாட்டோம்’ காவிரிக்காக கேபிள் சங்கம் போராட்டம்
‘டிவி சேனலை ஒளிபரப்ப மாட்டோம்’ காவிரிக்காக கேபிள் சங்கம் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தூர்தர்ஷன் சேனல்களை ஒளிபரப்புவதில்லை என தமிழ்நாடு கேபிள் டிவி சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழகத்தில் பெரும் போராட்டங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்தக் கோரிக்கைகளுக்காக பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி, மதுரை பெத்தானியா புரத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இந்தப் போராட்டத்தில் சுமார் 100 பேர் பங்கேற்றனர். தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இன்று 2 மணி நேரம் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். ஆர்பாட்டத்திற்கு பின் பேசிய தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு தலைவர் சேகர், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மத்திய அரசின் தூர்தர்ஷன் சேனலை ஒளிபரப்புவதில்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com