விரைவுச் செய்திகள்: மேட்டூர் அணை திறப்பு | தமிழக அரசின் புதிய திட்டங்கள் | தடுப்பூசி

விரைவுச் செய்திகள்: மேட்டூர் அணை திறப்பு | தமிழக அரசின் புதிய திட்டங்கள் | தடுப்பூசி
விரைவுச் செய்திகள்:  மேட்டூர் அணை திறப்பு | தமிழக அரசின் புதிய திட்டங்கள் |  தடுப்பூசி

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என விளக்கமளித்துள்ளது.

தென்சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை: சென்னை கிண்டியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரையில் 'கலைஞர் நினைவு நூலகம்': தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது, தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்படும் எனவும், மதுரையில் 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களப்பணியாற்றிய காவல்துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை: கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய சுமார் ஒரு லட்சத்து 17ஆயிரம் காவல்துறையினருக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் ஊழியர்கள் குளறுபடியால் குவிந்த மக்கள்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையை பெற ரேஷன் கடை முன் மக்கள்கூட்டம் குவிந்தனர். தேதி குறிப்பிடாமல் டோக்கன் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

+2 பொதுத்தேர்வு - நாளை முக்கிய ஆலோசனை: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்தலாமா?, வேண்டாமா? என்பது குறித்து கல்வியாளர்களுடன் நாளை மாலை ஆலோசனை நடத்தவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ +2 மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும்?: சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும் எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என ஏன் அறிவிக்கவில்லை? என்பது குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி-நீதிமன்றம் நம்பிக்கை: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை மத்திய- மாநில அரசுகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை அளித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

செல்போனை ஹேக் செய்ய முயற்சி எனப் புகார்: தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சி நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த துணை நடிகை புகார் அளித்துள்ளார். மேலும், மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கவும் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பயனாளர்களை ஏமாற்றும் வாட்ஸ்அப்: புதிய தனியுரிமைக் கொள்கைக்கு பயனாளர்களை ஏமாற்றி வாட்ஸ்அப் ஒப்புதல் பெறுகிறது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com